Skip to main content

கொள்ளையோ கொள்ளை | முன்னுரை

மொழிபெயர்ப்பாளரின் முன்னுரை
ஆசிரியர் குமரப்பா அவர்கள் சமீபத்தில் (மார்ச் 1947) ‘கிளைவ் முதல் கெய்ன்ஸ் வரை’ (Clive to Keynes) என்று ஆங்கிலத்தில் ஒரு நூலை எழுதி வெளியிட்டுள்ளார்கள். அதன் தமிழ் மொழிபெயர்ப்பே இந்நூலாகும். மூல நூலுக்கு அவ்வாறு பெயரிட்ட காரணத்தை விளக்கி குமரப்பா அவர்கள் ஒரு குறிப்பு எழுதியுள்ளார்கள். அதாவது:-
கிளைவ் பிரபுதான் இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தார் என்பதை எல்லோரும் அறிவார்கள். அவர் சிறுவராக இருந்த பொழுது ஆசிரியர்களுக்கு அளவற்ற துன்பம் கொடுத்துவந்தார். என்ன செய்வதென்று தெரியாமல் அவரைக் கிழக்கிந்தியக் கம்பெனியில் குமாஸ்தா வேலை பார்க்குமாறு இந்திய தேசத்திற்கு அவருடைய 18வது வயதில் அனுப்பி வைத்தார்கள். அவர் இந்தியாவில் 17 வருஷம் வேலை பார்த்துவிட்டு, 35வது வயதில் இங்கிலாந்து திரும்பினார். அப்பொழுது அவர் கையில் ரொக்கமாக 3 லட்சம் பவுனும், வருஷத்தில் 27 ஆயிரம் பவுன் வருமானம் வரக்கூடிய பூஸ்திதியும் இருந்தது. இந்த சூழ்ச்சிக்கார ராஜதந்திரி எவ்வாறு இந்தியப் பொதுப் பணத்தைக் கொள்ளையடிக்க வேண்டும் என்று திட்டம் வகுத்துச் சென்றாரோ அதே முறையைத்தான் இன்று வரை அரசாங்கம் கையாண்டு வருகிறது.
இந்த இருபதாம் நூற்றாண்டு ஆரம்பித்த காலத்திலிருந்து இங்கிலாந்து தேசத்தின் சர்க்கார் நிதி விஷயத்தில் யோசனை கூறும் நிபுணர் கெய்ன்ஸ் பிரபு என்பவர்.
பிரிட்டிஷார் பிற நாட்டோடு செய்யும் ஒப்பந்தங்கள், நஷ்டஈடுகள், யுத்தக் கடன்கள் முதலிய விஷயங்களை எல்லாம் அவரேதான் முடிக்கிறார். பிரிட்டன் வுட்ஸ்என்னும் இடத்தில் நடந்த மகாநாட்டை ஆட்டிவைத்தவரும் அவரே. அதுபோலவே இந்திய சர்க்காருடைய நிதி விஷயத்திலும் அவருக்கு அதிகமான செல்வாக்கு உண்டு. அவர் சுமார் 34 வருஷங்களுக்கு முன், ‘இந்தியச் செலாவணியும் நிதியும்என்று ஒரு நூல் எழுதினார். அன்று முதல் இந்திய விவகாரங்களிலும் அவருக்குச் செல்வாக்கு உண்டாயிற்று.
நம்முடைய வரிப்பணத்தை நாசமாக்கும் வமிச பரம்பரையை ஆரம்பித்து வைத்தவர் கிளைவ் பிரபு. அப்பரம்பரை கெய்ன்ஸ் பிரபுவுடன் முடிவடைந்துவிட வேண்டும் என்று விரும்புகிறோம்.
நூலிலுள்ள விஷயத்தைப் பொறுத்து தமிழில் கொள்ளையோ கொள்ளைஎன்ற இப்பெயர் பொருத்தமாக இருக்கும் என்று மாற்றப்பட்டுள்ளது.
மூல நூலிலுள்ள ஆங்கிலப் பதங்களுக்குச் சரியான தமிழ்ச் சொற்களைக் கோத்து இப்புத்தகம் ஆக்கப்படவில்லை. தேவையான இடங்களில் விஷயங்களைக் கூடிய வரையில் விளக்கியுமிருக்கிறேன். சாதாரணத் தமிழ் அறிவுள்ளவர்கள் கூட இந்நூலைப் படித்து விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டுமென்பதே என் நோக்கமாகும். மூல நூலிலுள்ள விஷயங்களும் அவைகள் எடுத்துரைக்கப்பட்டிருக்கும் சுவையும் சற்றும் குன்றாது இதில் காணப்படும் என்பது என் நம்பிக்கை.
மீ. விநாயகம்
மகன்வாடி,
வர்தா, ம.மா.
12-6-47
நூலாசிரியரின் முன்னுரை
தனக்கு உரிமை இல்லாத பிறரின் பொருள்களைக் கண்டு பேராசை கொள்ளுகின்ற ஒருவன் அப்பொருள்களை அபகரித்துக்கொள்ளப் பல்வேறு தந்திரங்களைக் கைக்கொள்ளுகிறான். இவைகளில் சர்வ சாதாரணமாகக் கருதப்படுவது வழிமறித்தல். அதாவது பொருள் உள்ளவன் தனிவழியே போக நேரிடுங்கால் அவனை வழிமறித்துப் பயமுறுத்துவதால், அவன் தன் உயிருக்கு அஞ்சிப் பொருள்களை எறிந்துவிட்டு ஓட்டமெடுக்கிறான். இதற்கு அடுத்தபடியாகச் சொல்லக்கூடியது, வஞ்சகன் பொருளுள்ளவனை அண்டிச்சென்று தன்னை அவனுடைய நம்பிக்கைக்கு உரியவனாக முதலில் செய்துகொள்ளுதல்; இக் கபட நாடகத்திற்குப் பிறகு, தன் கைவரும் தொகைகளைத் தன் சொந்தத்திற்கு உபயோகித்தல். மூன்றாவது தந்திரம் சாதாரணமாக வரவு செலவுக் கணக்கு எழுதுவோருக்குத் தெரிந்திருக்கக்கூடியதே. அதாவது பொய்க்கணக்கு எழுதுவது. வாங்காத சாமான்களை வாங்கியதாகச் செலவு எழுதவும், விற்று வந்த தொகையைச் சரியானபடி வரவு வைக்காமலும், சேமிப்புத் தொகையைச் சிறுகச்சிறுகச் சுரண்டுவதும், இன்னும் இதுபோன்ற பல்வேறு தந்திரங்களையும் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். நான்காவதாக, முதலாளியின் விலையுயர்ந்த பொருள்களை அற்பத் தொகைக்கு அடகு வைத்து உபயோகித்துக்கொள்ளுதல். கடைசியாக ஒரு சொத்திற்குத் தருமகர்த்தாவாக நியமிக்கப்பட்ட பிறகு, அச்சொத்துக்களை சுயநலத்திற்கு உபயோகித்தல். சொத்தின் உடைமைக்காரர்களுக்குக் காலணாவும் கண்ணில் காட்டுவதில்லை. இவை போன்று இன்னும் அநேக சூழ்ச்சிகளைப் பற்றி அடிக்கடி நாம் கண்டும் கேட்டும் வருகிறோம். மேலே சொன்னவை யாவும் ஒரு தனிநபரின் சொத்தை அபகரிப்பதற்கான தந்திரங்கள்.
பிரிட்டிஷார் நம் நாட்டுடன் கொண்டுள்ள தொடர்பைப் பற்றிச் சரித்திரபூர்வமாக ஆராயுமிடத்தே மேலே சொல்லப்பட்ட விபரீதச் சூழ்ச்சிகள் யாவற்றையும் தவறாது கையாண்டுள்ளதை நன்கு அறியலாம். இத் தந்திரங்கள் மட்டுமின்றி இன்னும் நவீனமான கொள்ளை முறைகளையும் இவர்கள் கண்டுபிடித்து அனுசரித்தும் வந்திருக்கிறார்கள் என்பது தெரியவரும்.
பிரிட்டிஷ் கஜானாவின் இரண்டாம் காரியதரிசியாகிய சர் வில்லியம் ஈடி, இங்கிலாந்து பாங்கியின் டிபுடி கவர்னர் மிஸ்டர் சி. எப். கோபால்ட், இங்கிலாந்திலுள்ள இந்தியா ஆபீஸின் பொருளாதார இலாகா தலைவர் மிஸ்டர் கே. ஆண்டர்சன், இங்கிலாந்து பாங்கின் நாணயமாற்று இலாகாவைச் சேர்ந்த மிஸ்டர் பி. எஸ். பேல் ஆகியவர்கள் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்துள்ள விஷயம் பற்றி நாம் அறிந்திருப்போம். இவர்கள் இந்தியாவுக்குத் திருப்பிக் கொடுக்கப்படவேண்டிய ஸ்டர்லிங்பாக்கியைப் பற்றி இந்திய அரசாங்க அதிகாரிகளுடனும், ரிசர்வ் பாங்கு அதிகாரிகளுடனும் கலந்து பேசப்போகிறார்களாம்.
இந்த ஸ்டர்லிங் கடன்என்றால் என்ன? ஆங்கிலேயர்கள் இந்தியாவில் காலடி எடுத்து வைத்த நாள் முதல் இந்நாட்டின் திரவியங்களை மனம் போனபடி அள்ளிச் செலவு செய்திருக்கிறார்கள் என்பது உலகமறியும் உண்மை. இந்த ஊதாரிச் செலவின் பெரும்பாகத்துக்கு இந்தியாவே பொறுப்பாளி என்று அடாவடியாகப் பொய்க்கணக்கும் எழுதியுள்ளார்கள். இவ்வாறு அவர்களே தயாரித்துள்ள வரவு செலவுக் கணக்கின்படி இன்று இங்கிலாந்து இந்தியாவிற்குப் பலகோடி ரூபாய்கள் திருப்பிக் கொடுக்கவேண்டி ஏற்படுகிறது. இதையே ஸ்டர்லிங் கடன்என்கிறார்கள்.
இவ்வளவு கோடிக்கணக்கான ரூபாய்களை இந்த ஏழை இந்தியா எவ்வாறு கடன் கொடுக்க முடிந்தது என்பது ஒரு ரஸமான சரித்திரமாகும். இதை நாம் ஒவ்வொருவரும் விளக்கமாகத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். இன்று இங்கிலாந்திலுள்ள வனப்பு மிகுந்த மாளிகைகள் யாவும் ஏழை இந்தியர்களின் எலும்புகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ளனஎன்று சொல்வது உண்மையாகும். இதையே இங்கு விளக்குவோம்.
ஜே. சி. குமரப்பா
15, பிப்ரவரி-'47
மகன் வாடி,
வர்தா, ம.மா.

கொள்ளையோ கொள்ளை மின் நூலை வாங்க,

Comments

Most Popular

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (