Skip to main content

சிறுமியின் தங்க நகை | தி. ஜ. ரங்கநாதன்

ஹரிஜன பணி மிகவும் முக்கியம்’ - இப்படி எண்ணினார், காந்தி. 'ஹரிஜனங்களை உயர்த்த வேண்டும்; இதற்குப் பணம் வேண்டும்' என்றார். ஊர் ஊராய் இதற்காக வந்தார்.
கன்னட நாட்டில் உடுப்பி என்ற ஊர் இருக்கிறது. அங்கே கிருஷ்ணர் கோயில் இருக்கிறது. அது மிகவும் புகழ்பெற்றது. உடுப்பிக்குக் காந்தி சென்றார்.
பலர் வரவேற்பு அளித்தார்கள். ஹிந்திப் பிரச்சார சபையினரும் ஒரு வரவேற்பு அளித்தார்கள். வரவேற்புப் பத்திரம் ஹிந்தியில் எழுதப்பட்டிருந்தது.
ஒரு சிறுமி அதை வாசித்தாள். அவளுக்கு வயது ஒன்பது; பெயர் நிருபமா. அந்த வயதிலேயே ஹிந்தி கற்றிருந்தாள். ஹிந்தியில் பேசுவாள், எழுதுவாள்.
கழுத்திலும் கையிலும் தங்க நகைகள் அணிந்திருந்தாள்.
பத்திரம் வாசித்து முடித்தாள். காந்தியிடம் அளித்தாள்.
அப்போது காந்தி சொன்னார்: "பத்திரத்தைக் கொடுக்கிறாய். சரி; வாங்கிக் கொள்கிறேன். நகைகள் போட்டிருக்கிறாயே! அவற்றையும் கொடுப்பாயா?"
நிருபமா தயங்கவில்லை. கழுத்திலே தங்கச் சங்கிலி இருந்தது. அதைக் கழற்றினாள். காந்தியிடம் கொடுத்தார்
"ஆமாம். உன் கையில் தங்க வளையல் இருக்கிறதே! அதையும் கொடுத்துவிடேன்" என்றார் காந்தி.
வளையலையும் நிருபமா கழற்றினாள்; காந்தியிடம் கொடுத்தாள். அவளுடைய கண்ணிலே நீர் துளும்பியது. அதைக் காந்தி பார்த்துவிட்டார். அவளை முதுகிலே தட்டிக் கொடுத்தார்.
"நீ அழுகிறாய். இப்படிக் கொடுத்தால் நான் வாங்கமாட்டேன்" என்றார்.
வளையலை அவளிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
அங்கே நிருபமாவின் பெற்றோர் இல்லை.
ஒரு வீட்டிலே காந்தி தங்கினார். காந்தியோடு கூடவே நிருபமாவும் போனாள். அங்கே நிருபமாவின் பெற்றோர் வந்தார்கள்.
இந்தச் செய்தியை நிருபமாவின் அம்மாவுக்கு யாரோ சொன்னார்கள்.
நிருபமாவிடம் அம்மா சொன்னாள்: அசடே காந்தி கேட்டால் அழலாமா? வளையலையும் கொடுத்துவிடு."
உடனே வளையலை நிருபமா மறுபடி கழற்றினாள்; காந்தியிடம் கொடுத்தாள். காதுத் தோட்டையும் கழற்ற முயன்றாள். காந்தி தடுத்தார்.
"வேண்டா, வேண்டா. அதை நீயே வைத்துக்கொள் இது போதும் எனக்கு" என்றார். நிருபமா, சரி என்று பேசாதிருந்தாள்.
மறுபடியும் காந்தி சொன்னார்: "நகைகளைக் கொடுத்தாய். இது எனக்குச் சந்தோஷம் தருகிறது. ஆனால், ஒன்று; இனி நீ ஒருநாளும் நகையே அணியக்கூடாது. சரிதானா?"
"சரி, நான் இனிமேல் நகை அணிய மாட்டேன்" என்றாள் நிருபமா. நாற்பதாண்டு உருண்டோடியது. நிருபமா சொன்னபடி நடந்தாள். அவள் நகையே அணியவில்லை. டாக்டர் வேலைக்குப் படித்தாள்; பட்டமும் பெற்றாள்.
நிருபமாவுக்கு காந்தி கடிதம் எழுதுவார். அவளும் அவருக்கு எழுதுவாள். கடிதங்கள் இந்தியில்தான் இருக்கும்.
மேடையில் ஏறி நிருபமா பேசுவாள். அதில் அவளுக்கு ஆசை. அவளுக்கு அசாத்தியக் கூச்சம்; கூட்டத்தில் பேச வராது. கண்ணீர் சொரிவாள்.
காந்திக்கு அவள் இதை எழுதினால் அதற்குக் காந்தி பதில் எழுதினார்: "நீ இன்னும் சிறு பெண். அதனால்தான் உனக்கு அழுகை வருகிறது. இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு மேடையில் ஏறாதே, பேசாதே. தனியே இருப்பாய் அல்லவா? அப்போதெல்லாம் உரத்துப் பேசிப் பழகு. ஆசையை இப்படி அடக்கு. அதனால் உன் திறமை பெருகும். மேடையில் பேசத் தானாக வந்துவிடும்."

அடுத்தக் கதை: பறக்கும் வித்தை

Comments

Most Popular

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு